Wednesday, September 25, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு:இடஒதுக்கீடு கிடையாது

      ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு முறையை பின்படுத்த வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அவர்வால், நீதிபதி சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக தகுதி தேர்வில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றால் தான் வேலை வாய்ப்பு என்ற கொள்கை முடிவில் அரசு சமரசம் செய்து கொள்ளாது,’ என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 22-ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது.

No comments:

Post a Comment

Followers