Friday, November 29, 2013

ATTENTION GROUP-II ASPIRANTS..

குரூப்-II தேர்வெழுதும் நண்பர்களுக்கு...

1.வினாத்தாளை பிரிக்க அனுமதிக்கப்பட்டவுடன் முதல் வினாவைப் படித்தவுடனே விடையளிக்க முற்படவேண்டாம் .

2.ஒருமுறை 200 வினாக்களையும் படித்து பாருங்கள் .

3.முதல் வாசிப்பில் சரியான விடை தெரிந்த வினாக்களை மட்டும் புள்ளியோ அல்லது சிறிய அளவிலான டிக்கோ அடித்து குறித்து கொள்ளுங்கள் .

4.இரண்டாவது வாசிப்பில் தெரியாத வினாக்களுக்கான விடைகளையும் முடிவு செய்து கொள்ளுங்கள். 

5.முதலில் உமக்கு தோன்றிய விடைகளை இரண்டாவது வாசிப்பில் மாற்ற வேண்டாம்.

6.ஒவ்வொரு வினாக்களுக்கு விடை அளிக்கும்போதும் வினா எண்ணில் விரலை வைத்து சரியான விடையினை மார்க் செய்யவும்.

7.தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளிக்கலாம் என்றெண்ணி அங்கொன்றும் இங்கொன்றுமாக விடையளிக்க வேண்டாம். இதனால் டபுள் ஷேடிங் ஏற்பட வாய்ப்புள்ளது.

8.நான்கு OPTION னுமே தெரியாத வினாக்களுக்கு ஏதேனும் ஒரு விடையை தெரிவு செய்யுங்கள்.( 20 வினாக்களுக்கு விடை தெரியவில்லை என்றால் அந்த 20 வினாக்களுக்கும் ஏதேனும் ஒரு விடையை தெரிவு செய்யுங்கள்.)

9.கடைசி 45 நிமிடங்களில் 1-200 வினாக்களுக்கும் விடையளிக்க முடியும்.

10.மிக முக்கியமானது நேர நிர்வாகம். ஒவ்வொரு அரை மணித்துளிகளுக்கும் கடந்து வந்த நேரத்தை கவனியுங்கள். REASONING போன்ற நெடுநேரம் யோசிக்க வைக்கும் வினாக்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அதற்கேற்ப திட்டமிடுங்கள். COMPLETE YOUR ANSWER SHEET . 200 வினாக்களுக்கும் நீங்கள் படித்து விடையளித்தாலே PRELIMS வெற்றி சாத்தியமாகும் .  

அனைவரும் PRELIMS தேர்வில் வெற்றி பெற விடியலின் நல்வாழ்த்துகள் .

Thursday, November 28, 2013

NOTA பட்டன்

Electronic Voting Machine -ல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது  NOTA பட்டன் .  EVM -ல் அனைத்து வேட்பாளர்களின் சின்னங்களுக்கு கீழே கடைசியாக இந்த NOTA பட்டன் அமைந்திருக்கும். அதன் காரணமாகவே மேற்கண்ட எதுவும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் None Of The Above என்பதன் சுருக்கமே NOTA .

Thursday, November 7, 2013

TET RESULT - VIDIYAL STATE RANKER

வேலூர் விடியல் பயிற்சி மைய மாணவி திருமதி.J .ரேவதி TET முதல் தாளில் 118 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 12-வது RANK பெற்றுள்ளார். அவரையும் இதர 84 சாதனையாளர்களையும் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கி பல நல்லாசிரியர் விருதுகள் பெற்றிட வாழ்த்துகிறோம்.

Wednesday, November 6, 2013

TET RESULTS - VIDIYAL ACHIEVERS

153 பேர் தேர்ச்சி
2013 TET தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி எமது விடியல் பயிற்சி மையங்களிலிருந்து மொத்தம் 153 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் வேலூர் விடியல் மையத்தில் மட்டும் 93 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறோம். இவ்வெற்றிக்கு காரணமான அனைத்து பயிற்றுனர்களுக்கும் நன்றியினை விடியல் தெரிவித்துக்கொள்கிறது. வேலூர் விடியலில் பயின்றவர்களில் 66 பேர் இரண்டாம் தாளிலும், 27 பேர் முதல் தாளிலும் வெற்றி பெற்றுள்ளனர். வணங்கத்தக்க மகத்தான ஆசிரியர் பணிக்கான சுற்று வட்ட பாதையில் இணைந்துள்ள விடியல் மங்கள்யான்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.                       .



 மேகம்                  
தொட்டதில் 
மகிழ்ச்சி.. 
வானம் 
வசப்பட 
வாழ்த்துகள்.

Tuesday, October 29, 2013

2013 TET RESULTS PUBLISHED


ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு 


ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு:  ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in)  அறிந்து கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாவது ஆண்டாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று தாள் ஒன்றும், அதற்கடுத்த நாள் (ஆகஸ்ட் 18) தாள் இரண்டுக்கான தேர்வும் நடத்தப்பட்டது.
இரண்டு மாதங்களில் முடிவுகள்:
தேர்வு முடிவுகளை இரண்டு மாதங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தாள் ஒன்றினை 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரும், தாள் இரண்டினை 4 லட்சத்து 311 பேரும் எழுதினர். இதில் தாள் ஒன்று தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான 60 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமான மதிப்பெண்களை 12 ஆயிரத்து 596 பேர் பெற்றுள்ளனர். அதன்படி தேர்ச்சி சதவீதம் 4.80 சதவீதமாகும். அதில், ஆண்களின் தேர்ச்சி 4.56 சதவீதமாகவும், பெண்களின் தேர்ச்சி 4.88 சதவீதமாகவும் உள்ளது.
மொழிப்பாடங்களில் எத்தனை பேர்:
மொழிப் பாடங்களைப் பொறுத்தவரையில், தாள் ஒன்றில் தமிழ் மொழியில் 12 ஆயிரத்து 433 பேரும், தெலுங்கில் 106 பேரும், மலையாளத்தில் 20 பேரும், உருதுவில் 23 பேரும், கன்னடத்தில் 14 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தாள் இரண்டில் ஆண்களின் ஆதிக்கம்:
பட்டதாரிகள் அதிகளவில் பங்கேற்ற தாள் இரண்டினைப் பொறுத்தவரையில், 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 14 ஆயிரத்து 496 பேர். தேர்ச்சி சதவீதம் 3.62. தாள் ஒன்றில் பெண்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தாள் இரண்டினைப் பொறுத்தவரையில் ஆண்களே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்களின் தேர்ச்சி சதவீதம் 4.16 ஆக உள்ளது. பெண்கள் 3.39 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தாள் இரண்டில் தமிழ் மொழியில் 14 ஆயிரத்து 363 பேரும், தெலுங்கில் 107 பேரும், மலையாளத்தில் 10 பேரும், உருதுவில் 6 பேரும், கன்னடத்தில் 10 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Sunday, October 13, 2013

PG TRB C.V CENTRES @ DATE

TEACHERS RECRUITMENT BOARD CERTIFICATE VERIFICATION CENTERS LIST
CERTIFICATE VERIFICATION DATES : 22.10.2013 and 23.10.2013

Note : The Call Letter and other relevant forms will be uploaded in website  only on Tuesday (15.10.2013).  Candidates can take that printouts from Tuesday onwards.

1  KANYAKUMARI TIRUNELVELI THOOTHUKUDI
SLB GOVT. HR. SEC. SCHOOL,
NAGERCOIL, KANYAKUMARI DT -629001,
PH. NO. 04652 -232867    
2  RAMANATHAPURAM SIVAGANGAI PUDUKKOTTAI 
GOVT. HR.SEC. SCHOOL,
MARUTHUPANDIYAN NAGAR,
COLLECTOR OFFICE COMPUS,
SIVAGANGAI-630562
PH. NO. 04575-240759, CELL: 9994836771    
3  MADURAI VIRUDHUNAGAR    
SRI MEENAKSHI SUNDARESWARAR GIRLS HSS,
TEPPAKULAM,
MADURAI -625 009
PH. NO. 0452-2311169 
4  DINDIGUL THENI    
JOHN PAUL HR. SEC., SCHOOL,
DINDIGUL -624 001,
PH.NO. 0451 -2421037 
5  COIMBATORE THE NILGIRIS TIRUPPUR    
PRESENTATION CONVENT GOVT. HSS,
NEAR HPO,
COIMBATORE -641001 PH.NO. 0422-2392458, CELL : 9443000648 
6  NAMAKKAL KARUR 
GOVT. GIRLS HR. SEC. SCHOOL,
NAMAKKAL -637001,
PH.NO. 222555,
CELL : 9489900307 
7  DHARMAPURI 
ADIAMAN ARASU BOYS HR. SEC. SCHOOL,
DHARMAPURI-636701.
PH. NO. 7373773324   
8  TIRUCHIRAPALLI, ARIYALUR, PERAMBALUR    
BISHOP HEEPER HR. SEC. SCHOOL,
PUTHUR, TRICHY-18,
PH.NO. 9345286552 
9  TIRUVARUR NAGAPATTINAM THANJAVUR 
V.S BOYS HR. SEC. SCHOOL,
SOUTH BANK TIRUVARUR -610 001,
PH.NO. 04366 -240502    
10  VILLUPURAM CUDDALORE 
GOVT. GIRLS HR. SEC. SCHOOL,
VILLUPURAM -605 602
PH. NO. 9488243734 
11  TIRUVANNAMALAI KRISHNAGIRI    
DANISH MISSION HR. SEC. SCHOOL,
TIRUVANNAMALAI -606 602
PH. NO. 9443815445 
12  VELLORE KANCHEEPURAM    
GOVT. MUSLIM HR. SEC. SCHOOL,
ANNA SALAI, VELLORE -632 001
PH. NO. 9360743154 
13  CHENNAI THIRUVALLUR    
FATHIMA MAT. HR. SEC. SCHOOL,
SAIDAPET,
CHENNAI -600 015
PH.NO. 23810627, CELL : 9884074728 
14  ERODE SALEM    
GOVT. GIRLS HR. SEC. SCHOOL,
ERODE -638 001
            PH.NO. 0424 -2250940 

Saturday, October 12, 2013

PG TRB RESULT


 SELECTION LIST :http://trb.tn.nic.in/PG2013/11102013/Msg1.htm

     Subjectwise lists of candidates short listed for Certificate Verification, based on the Written Examination marks and Communal Rotation in the ratio of 1:1 are also released. In the case of Candidates obtained equal marks in the last communal turn, the senior in date of birth alone is called for certificate verification. Call letters for certificate verification along with necessary forms are uploaded in TRB website. Candidate have to take printouts of those things. No letter will be sent through post.

Saturday, October 5, 2013

இந்திய அரசியலமைப்பு

முக்கிய அரசியலமைப்புத் திருத்தங்கள்:

* 1-வது திருத்தம்(1951) வெளிநாடுகளுடன் பேச்சுரிமை, கருத்துப் பரிமாற்றம் மற்றும் எந்தப் பணியும் மேற்கொள்வது போன்றவற்றிற்குக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசுக்கு அனுமதி அளித்தது.
* 7-வது திருத்தம் (1956) - மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட இத்திருத்தம் வகை செய்தது.
* 10-வது திருத்தம் (1960) தாத்ரா, நாகர் ஹவேலி போன்ற போர்ச்சுகீசிய காலனிகள் இந்திய ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டன.
*11-வது திருத்தம் (1961) - துணை குடியரசுத் தலைவரை தேர்ந்ேதெடுப்பதற்கான உரிமை பாராளுமன்றத்தின் இருசபைக்கும் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்போரில் காலியிடங்கள் உள்ளன என்று கூறி தேர்தலை எதிர்த்து வழக்கு போடுவதையும் இது தடை செய்தது.
* 12-து திருத்தம் (1962) - கோவா, டாமன்-டையூ போன்ற இடங்கள் மத்திய ஆட்சிப் பகுதிகளாக்கப்பட்டன.
*13-வது திருத்தம் (1962) - நாகாலாந்தை இந்தியாவின் 16-வது மாநிலமாக்கியது.
* 14-வது திருத்தம் (1962) - பாராளுமன்றத்திற்கு மத்திய ஆட்சிப்பகுதியில் சட்டப்பேரவைகளை உருவாக்க சட்ட அதிகாரம் வழங்கப்பட்டது. பாண்டிச்சேரி மத்திய ஆட்சிப்பகுதி ஆக்கப்பட்டது.
* 18-வது திருத்தம் (1966) - பஞ்சாபி மொழி பேசும்பகுதி பஞ்சாப் என்றும், இந்தி மொழி பேசும் ஹரியானா என்றும் பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
* 21-வது திருத்தம் (1967) - சிந்தி மொழி எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
* 24-வது திருத்தம் (1971) - அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் திருத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு அளிக்கப்பட்டது. இத்திருத்தத்தின் சிறப்பம்சம் குடியரசுத் தலைவரின் மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் நீக்கப்பட்டதே.
* 26-வது திருத்தம் (1971) - பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 525-லிருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது. மத்திய ஆட்சிப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 லிருந்து 20 ஆகக் குறைக்கப்பட்டது.
* 35-வது திருத்தம் (1974) - சிக்கிம் இணை மாநில அந்தஸ்து பெற்றது.
* 36-வது திருத்தம் (1975) - சிக்கிம் இந்தியாவில் 22-வது மாநிலமாக உருவானது.
* 41-வது திருத்தம் (1976) - மாநில தேர்வாணையக் குழு உறுப்பினர்களின் உச்ச வயதுவரம்பு 60-லிருந்து 62-ஆக உயர்த்தப்பட்டது.
* 42-வது திருத்தம் (1976) - இதன் முக்கிய நோக்கம் சரண்சிங் கமிட்டியின் பரிந்துரைகளை அமல் செய்வதாகும். நீதித்துறையின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டன. பாராளுமன்றம் மிகுந்த அதிகாரம் மிகுந்ததாக மாறியது. அடிப்படை உரிமைகள் பட்டியல் உருவாக்கப்பட்டது.
* 44-வது திருத்தம் (1978) சுருங்கக் கூறின் 42-வது திருத்தம் முழுவதுமாக திரும்ப்ப பெறப்பட்டது. சொத்துரிமை அடிப்படை உரிமை அன்று என்று குறிப்பிடப்பட்டது. உள்நாட்டுக் குழப்பங்களுக்காக அவசர நிலைப்பிரகடனம் செய்ய இயலாது. தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஒருவரை இரண்டு மாதத்திற்கு மேல் காவலில் வைக்க பரிசீலனைக் குழுவின் முன் அனுமதி பெற வேண்டும்.
* 55-வது திருத்தம் (1986) - அருணாச்சலப் பிரதேசம் முழு மாநில அந்தஸ்து பெற வகை செய்கிறது.
* 56-வது திருத்தம் (1987) - கோவாவுக்கு முழு மாநில அந்தஸ்து தரப்பட்டது. டாமன்-டையூ பிரிக்கப்பட்டு மத்திய ஆட்சிப் பகுதியாக்கப்பட்டன.
* 58-வது திருத்தம் (1987) - அரசியலமைப்பின் அதிகாரப் பூர்வ இந்தி மொழி பெயர்ப்பை வெளியிட வகை செய்யும் திருத்தம்.
* 61-வது திருத்தம் (1989) - வாக்களிக்கும் வயது 21லிருந்து 18-ஆகக் குறைக்கப்பட்டது.
* 69-வது திருத்தம் (1991) - தில்லியை தேசிய தலைநகர ஆட்சிப்பகுதியாக அறிவித்தது.
* 70-வது திருத்தம் (1992) - தில்லி மற்றும் பாண்டிச்சேரி ஆகியவற்றின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை வழங்கியது.
* 71-வது திருத்தம் (1992) - கொங்கணி, மணிப்புரி மற்றும் நேபாளி மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
* 73-வது திருத்தம் (1992) - பஞ்சாயத்து இராஜ்யம் குறித்த விவரங்களைப் புகுத்தியது.
* 74-வது திருத்தம் (1992) - நகராட்சி குறித்த விவரங்களைப் புகுத்தியது.
* 86-வது திருத்தம் (2002) - 21-A என்ற புதிய ஷரத்தைப் புகுத்தியது. மேலும் ஷரத்து 45, 6 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கல்வி அளிக்கவும், மற்றும் சிறார் பருவத்திற்கான வாய்ப்புக்களை அளிப்பதிலும், போதிய கவனத்தை அரசு செலுத்த வேண்டுமென்றும் மாற்றி அமைக்கப்பட்டது. அது போலவே 51-A-ல் (K ) என்ற மற்றொரு அடிப்படைக் கடமை இணைக்கப்பட்டது. இப்புதிய கடமையின்படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான கல்வி வசதியை அளிப்பது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கடமை என்று குறிப்பிடப்பட்டது.
* 91-வது திருத்தம் (2003) - கட்சித் தாவல் குறித்த விதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அதிகபட்சம் 15 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டது. கீழவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 40 உள்ள இடங்களுக்கு மட்டுமே, அதிகபட்சம் 12 அமைச்சர்கள் என்று வரையறுக்கப்பட்டது.
* 92-வது திருத்தம் (2003) - மைதிலி, போடோ, டோக்ரி மற்றும் சாந்தலி ஆகிய மொழிகளின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
* 93-வது திருத்தம் (2006) - அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிறபடுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்க வழி செய்யும் திருத்தம்.
* 95-வது திருத்தம் (செப்2011) - எட்டாவது அட்டவணையில் ஒரியா மொழிப் பெயரை ஒடியா என திருத்த இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
Parts of the Constitution
Part-I - Union and its territories
Part-II - Citizenship
Part-III - Fundamental Rights
Part-IV - Directive Principles of State Policy
Part-IV A - Fundamental Duties
Part -V - Union
Part-VI - States
Part-VII - Repealed (Part-B of First Schedule)
Part-VIII - Union Territories
Part-IX - Panchayat Raj Institutions
Part-IXA - Municipalities
Part-X - Scheduled and Tribal areas
Part-XI - Centre State Relations
Part-XII - Finance, Property, Contracts and Suits,
Part-XIII - Trade, Commerce, Intercourse within the territory of india
Part-XIV - Services under the Union and States
Part-XIV A - Administrative Tribunals
Part-XV - Elections
Part-XVI - Special Provisions Relating to certain classes
Part-XVII - Official Languages
Part-XVIII - Emergency
Part-XIX - Miscellaneous Provisions
Part-XX - Amendment
Part-XXI - Temporary, transitional and Special Provisions
Part-XXII - Short title, Commencement and repeal of the Constitution

Wednesday, October 2, 2013

PG TAMIL மறுதேர்வு நடத்த உத்தரவு

  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாட போட்டித் தேர்வு ரத்து செய்யப்பட்டு, விரைவில் மறுதேர்வு நடத்த  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 21.7.2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் தேர்வை மாநிலம் முழுதும் 32 ஆயிரம் பேர் எழுதினர். இதில் சுமார் 8 ஆயிரம் பேர் வரை குரூப் பி-யில் பிழையான கேள்வித் தாள் இருந்ததாகவும், அதில் 40 மதிப்பெண்கள் வரை இருந்த பிழையான கேள்வித் தாளால் தங்கள் வாய்ப்பு பறிபோனதாகவும் கூறி, இதற்காக மறுதேர்வு நடத்த வேண்டும், அல்லது முழு மதிப்பெண் இதற்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை கோ.புதூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.,இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் நடைபெற்று வந்தது. இதில், மறு தேர்வு நடத்த செவ்வாய்க் கிழமை இன்று நீதிபதி உத்தரவிட்டார். அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் சோமையாஜி, மறுதேர்வு நடத்த கால அவகாசத்துடன் நேரம் அதிகமாகும் என்பதால், 40 மதிப்பெண்களை நீக்கி விட்டு மீதத்துக்கு கணக்கில் கொள்ளலாம் என்றும், அல்லது 40 மதிப்பெண்களை போனஸ் மதிப்பெண்ணாகக் கொடுக்கலாம் என்றும் ஆலோசனை கூறினார். ஆனால் இந்த ஆலோசனைகளை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். 4 மாதிரி பிரிவு வினாத்தாள் தயாரிக்கப்பட்டது, இதில்1 பிரிவில் மட்டுமே பிழையான வினாத்தாள் இருந்துள்ளது. இந்த வினாத்தாள் அனைத்துமே பிழை என்றால் அரசின் பரிந்துரைகளை ஏற்கலாம் ஆனால் ஒரு பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே என்பதால் பாதிப்பு கணக்கிடப் படும். எனவே, இந்த உத்தரவு கிடைத்த 6 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்த வேண்டும். இதற்காக, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய நுழைவுச் சீட்டையே பயன்படுத்திக் கொள்ளலாம்; அல்லது அதனை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய விண்ணப்பமும் பெறத் தேவையில்லை என்றார் நீதிபதி.

Monday, September 30, 2013

TET SPECIAL EXAM

          மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றவர்களை கொண்டு விரைவில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். 
இதனை அறிந்தவுடன், அரசு உயர் அதிகாரிகளையும், சமூக நலத் துறை அமைச்சரையும் அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். அவர்களும் இது குறித்து மூன்று கட்டபேச்சுவார்த்தையை நடத்தினார்கள். இந்தச் சூழ்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் (Backlog Vacancies) மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். 
பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும். முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர். தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப் பட்டம் பெற்ற பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்கும். இந்த நடவடிக்கைகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் உருவாக்க வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது

Wednesday, September 25, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு:இடஒதுக்கீடு கிடையாது

      ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு முறையை பின்படுத்த வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அவர்வால், நீதிபதி சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக தகுதி தேர்வில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றால் தான் வேலை வாய்ப்பு என்ற கொள்கை முடிவில் அரசு சமரசம் செய்து கொள்ளாது,’ என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 22-ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது.

Saturday, September 21, 2013

GROUP-I MAINS EXAM POSTPONED

டி.என்.பி.எஸ்.சி சார்பி்ல் நடக்க உள்ள குரூப் -1 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்தியி்ல், குரூப்-1 க்கான முதன்மை தேர்வு செப். 27, 28, மற்றும் 29-ம் தேதிகளில் நடக்க விருந்ததது. தற்போது முதன்ம‌ை தேர்வு அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, September 4, 2013

GROUP-II தேர்வு அறிவிப்பு

GROUP-II தேர்வு அறிவிப்பு -1064 பணியிடங்கள் 
    TNPSC நடத்தும் குரூப் 2 முதனிலைத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது மொத்தம் 1064 நேர்முகத்தேர்வு பணியிடங்களுக்கான தேர்வு 2013 டிசம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். செப்டம்பர் 6-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 4, 2013. MAIN தேர்வுக்கு 1064*10=10640 பேர் தெரிவு செய்யப்படுவார்கள். முதனிலைத் தேர்வு (PRELIMS) கொள்குறிவகை வினாக்களைக் (OBJECTIVE) கொண்டதாக இருக்கும். தேர்வு பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Friday, May 10, 2013

TNPSC GR-II COACHING

விடியல் நடத்தும் TNPSC GROUP-II,  தேர்வு
 பயிற்சி வகுப்புகள் .
    TNPSC மூலம் விரைவில் நடத்தடப்படவுள்ள GROUP-II தேர்வுக்கு நமது வேலூர்  விடியல் பயிற்சி மையம் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. முதல் நாள் பயிற்சி வகுப்புகள் 01-09-2013 ஞாயிறு அன்று தொடங்கப்படவுள்ளன. பயிற்சி பற்றிய மேலும் விவரங்களுக்கு: 9092997509.     

Monday, April 1, 2013

SUR-REGISTRAR FROM VIDIYAL

GROUP-II தேர்வில்  தேர்ச்சி பெற்று வேலூரில் பயிற்சி சார்பதிவாளராக பணி சேர்ந்துள்ள திரு.மணிகண்டன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்

Followers