Sunday, June 29, 2014


      இன்று நடந்த குரூப்-IIA தேர்வில் கேட்கப்பட்ட பொதுத்தமிழ்  கேள்விகளுக்குரிய  உத்தேச விடைகள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன. . 

இது பற்றிய உங்களின் கருத்துகளை பின்னூட்டத்தில் பதியுங்கள்.

Tuesday, May 13, 2014

       வேலூர் விடியல் பயிற்சி மையத்தின் குரூப்-IIA தேர்வாளர்களுக்கு 12-வது பயிற்சித் தேர்வாக உயிரியல் தேர்வு நடைபெறவுள்ளது. VAO தேர்வாளர்களுக்கு இந்த வாரம் 7-வது பயிற்சித்தேர்வாக பொதுத்தமிழ் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தேர்வும்  நடைபெறவுள்ளன. கடந்த வாரம் GROUP-IIA-க்கு நடந்த Indian National Movement பகுதியில் 200 வினாக்களைக்கொண்டு நடத்தப்பட்ட  பயிற்சித்தேர்வில் N.RAJASEKARAN  177/200 மதிப்பெண்களைப் பெற்று வகுப்பில் முதலிடம்  பெற்றார். அவருக்கு பலரும் வாழ்த்து  தெரிவித்தனர். அவருடன்  இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கும் விடியல் மைய இயக்குனர் ஊக்கப் பரிசு வழங்கினார்.

Monday, March 24, 2014

       இன்று தொடங்கிய குரூப் 4 கலந்தாய்வில் பங்கு பெற்று பணி  நியமன ஆணையுடன் விரைவில் அரசுப் பணியில் அடியெடுத்து வைக்க இருக்கும் அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் வேலூர் விடியல் பயிற்சி மையத்தின் இனிய நல்வாழ்த்துகள். அரசுப் பணியில் பல பதவி உயர்வுகள் பெற்று அரசுப்பணிக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பெருமை சேர்க்கவும் விடியல் உங்களுக்காக பிரார்த்திக்கிறது.

Saturday, March 15, 2014

விடியல் மையங்கள்

      விடியல் பயிற்சி மையம் வேலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் ஆங்காங்கே விடியல் பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாக அறிகிறோம். அவர்களுக்கும் விடியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.  

         எமக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. போலிகளை கண்டு ஏமாற வேண்டாம்.


TNPSC GROUP IV C.V க்காக காத்திருக்கும் நண்பர்களுக்கு !

   நண்பர் மணியின் ஒட்டுமொத்த ரேங்க் 4784. இனவாரியான ரேங்க் (பி.வ) 2598. இவருக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு கடிதம் வந்துள்ளது என பதிவு செய்துள்ளார். அவருக்கு நமது வாழ்த்துகள் . இதன் மூலம் சுமார் 5000 ஒட்டுமொத்த ரேங்க் வரை உள்ளவர்களுக்கும் அழைப்பு கடிதம் விரைவில் வரும் என நம்பலாம். 

       அழைப்புக் கடிதங்கள் அஞ்சல் வழியாக மட்டுமே அனுப்பப்படுவதாக தெரிகிறது. ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனவே 4784க்கும் குறைவாக ரேங்க் உள்ளவர்கள் கவலைப்படவேண்டாம். கண்டிப்பாக அழைப்புக்கடிதம் வரும். நீங்கள் அஞ்சல் அலுவலரோடு தொடர்பில் இருங்கள். மேலும் 3469 பணியிடங்களுக்கு 5000 ரேங்க் வரை அழைப்பு வருவது என்பது எப்படி என்றால் ஏற்கனவே குரூப் 2 NON -OT பணியிடங்களில் தேர்வாகி உள்ளவர்கள் குரூப் 4 பணியிடங்களுக்கு வரமாட்டார்கள் என்பதை எதிர்பார்த்து கூடுதலாக அழைப்பு கடிதம் அனுப்பப் பட்டிருக்கலாம் . அதுமட்டுமல்லாமல் PSTM (PERSONS STUDIED IN TAMIL MEDIUM) பிரிவில் வருபவர்களுக்கும் 3500க்கும மேல் ரேங்க் இருந்தாலும் வர வாய்ப்புள்ளது. 

Saturday, March 8, 2014

மகளிர் தின நல்வாழ்த்துகள் !

அன்னையாய் ..
ஆச்சியாய் ...
அன்பு சகோதரியாய்..
இல்லத்தரசியாய் 
நின்று ...
நெறிப்படுத்தி
எம்மை
இயக்கிக்கொண்டிருக்கும்
மகளிர் மனங்களுக்கு
இனிய மகளிர் தின
நல்வாழ்த்துகள் !

Wednesday, March 5, 2014

GROUP-IV MARKS ANALYSIS & EXPECTED CUT-OFF

     குரூப் -4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் , ஒட்டுமொத்த ரேங்க் மற்றும் இனவாரியான ரேங்க்-ம் வெளியிடப்பட்டுள்ளன . இதில் மொத்த காலிப் பணியிடங்கள் இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் 3469  உள்ளது. எனவே ஒட்டுமொத்த ரேங்க் 3469க்குள் இருந்தால் பணி  கிடைத்துவிடும் என சிலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். முக நூலிலும் அவ்வாறே பதிவிடுகிறார்கள். ஆனால்  அவ்வாறு இல்லை என்பதே உண்மை. மொத்தமுள்ள 3469 பணியிடங்களை இனவாரியாக பிரித்தால் பொதுப் பிரிவினருக்கு 1075 பணியிடங்களும், பிற்பட்ட வகுப்பினருக்கு 919 பணியிடங்களும், மிக பிற்பட்ட வகுப்பினருக்கு 694 பணியிடங்களும், ஆதிதிராவிட வகுப்பினருக்கு 624 பணியிடங்களும் (அருந்ததியர் உட்பட), பழங்குடியினருக்கு 35 பணியிடங்களும் , முஸ்லிம்களுக்கு 122 பணியிடங்களும் நிரப்பப்படும். இதிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீடும் அடங்கும்.

   ஆனாலும் பொதுப்பிரிவினர் என்ற வரையறைக்குள் அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினரும் பங்கு பெற முடியும் என்பதால், ஒவ்வொரு பிரிவிலும் மேலும் 100 முதல் 200  பேர் வரை கூடுதலாக பணி வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.  எனவே இதனைப்  புரிந்து உங்களின் பணி  வாய்ப்பை பற்றி   ஒரு முடிவுக்கு வரலாம். உங்கள் அனைவருக்கும் பணி கிடைக்க விடியலின் நல்வாழ்த்துகள் . அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தராமல் இருக்க நிஜத்தை புரிந்து பணி கிடைக்கும் நிலை இருந்தால் கொண்டாடுங்கள் . வாய்ப்பு குறைவாக இருந்தால் மேலும் போராடுங்கள் . 
   வெளியாகியிருக்கிற மதிப்பெண்களை வைத்து பார்க்கும் போது நமது விடியல் வெளியிட்ட கட் ஆப் ஓரளவு துல்லியமாகவே பொருந்தும் என்றே தோன்றுகிறது. எனவே மீண்டும் ஒரு முறை எமது கட்-ஆப் ஐ சரிபார்த்துக்கொள்ளுங்கள் . நன்றி. CUT-OFF விவரங்களுக்கு கிளிக் செய்க: www.vidiyalarni.blogspot.in



Friday, January 24, 2014

TET CENTURY BY VIDIYAL VELLORE.

VELLORE VIDIYAL 188 NOT OUT....


வேலூர் வெயில் சதமடிக்கும் என்பது பழைய செய்தி.
வேலூர் விடியல் சதமடித்துள்ளது புதிய செய்தி. 

ஆம். 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் 188 (Original Result and 5% Relaxation Result) பேர் வேலூர் விடியலில் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த Faculties அனைவருக்கும் விடியலின் இதயங்கனிந்த நன்றி.

Friday, November 29, 2013

ATTENTION GROUP-II ASPIRANTS..

குரூப்-II தேர்வெழுதும் நண்பர்களுக்கு...

1.வினாத்தாளை பிரிக்க அனுமதிக்கப்பட்டவுடன் முதல் வினாவைப் படித்தவுடனே விடையளிக்க முற்படவேண்டாம் .

2.ஒருமுறை 200 வினாக்களையும் படித்து பாருங்கள் .

3.முதல் வாசிப்பில் சரியான விடை தெரிந்த வினாக்களை மட்டும் புள்ளியோ அல்லது சிறிய அளவிலான டிக்கோ அடித்து குறித்து கொள்ளுங்கள் .

4.இரண்டாவது வாசிப்பில் தெரியாத வினாக்களுக்கான விடைகளையும் முடிவு செய்து கொள்ளுங்கள். 

5.முதலில் உமக்கு தோன்றிய விடைகளை இரண்டாவது வாசிப்பில் மாற்ற வேண்டாம்.

6.ஒவ்வொரு வினாக்களுக்கு விடை அளிக்கும்போதும் வினா எண்ணில் விரலை வைத்து சரியான விடையினை மார்க் செய்யவும்.

7.தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளிக்கலாம் என்றெண்ணி அங்கொன்றும் இங்கொன்றுமாக விடையளிக்க வேண்டாம். இதனால் டபுள் ஷேடிங் ஏற்பட வாய்ப்புள்ளது.

8.நான்கு OPTION னுமே தெரியாத வினாக்களுக்கு ஏதேனும் ஒரு விடையை தெரிவு செய்யுங்கள்.( 20 வினாக்களுக்கு விடை தெரியவில்லை என்றால் அந்த 20 வினாக்களுக்கும் ஏதேனும் ஒரு விடையை தெரிவு செய்யுங்கள்.)

9.கடைசி 45 நிமிடங்களில் 1-200 வினாக்களுக்கும் விடையளிக்க முடியும்.

10.மிக முக்கியமானது நேர நிர்வாகம். ஒவ்வொரு அரை மணித்துளிகளுக்கும் கடந்து வந்த நேரத்தை கவனியுங்கள். REASONING போன்ற நெடுநேரம் யோசிக்க வைக்கும் வினாக்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அதற்கேற்ப திட்டமிடுங்கள். COMPLETE YOUR ANSWER SHEET . 200 வினாக்களுக்கும் நீங்கள் படித்து விடையளித்தாலே PRELIMS வெற்றி சாத்தியமாகும் .  

அனைவரும் PRELIMS தேர்வில் வெற்றி பெற விடியலின் நல்வாழ்த்துகள் .

Thursday, November 28, 2013

NOTA பட்டன்

Electronic Voting Machine -ல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது  NOTA பட்டன் .  EVM -ல் அனைத்து வேட்பாளர்களின் சின்னங்களுக்கு கீழே கடைசியாக இந்த NOTA பட்டன் அமைந்திருக்கும். அதன் காரணமாகவே மேற்கண்ட எதுவும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் None Of The Above என்பதன் சுருக்கமே NOTA .

Thursday, November 7, 2013

TET RESULT - VIDIYAL STATE RANKER

வேலூர் விடியல் பயிற்சி மைய மாணவி திருமதி.J .ரேவதி TET முதல் தாளில் 118 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 12-வது RANK பெற்றுள்ளார். அவரையும் இதர 84 சாதனையாளர்களையும் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கி பல நல்லாசிரியர் விருதுகள் பெற்றிட வாழ்த்துகிறோம்.

Wednesday, November 6, 2013

TET RESULTS - VIDIYAL ACHIEVERS

153 பேர் தேர்ச்சி
2013 TET தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி எமது விடியல் பயிற்சி மையங்களிலிருந்து மொத்தம் 153 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் வேலூர் விடியல் மையத்தில் மட்டும் 93 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறோம். இவ்வெற்றிக்கு காரணமான அனைத்து பயிற்றுனர்களுக்கும் நன்றியினை விடியல் தெரிவித்துக்கொள்கிறது. வேலூர் விடியலில் பயின்றவர்களில் 66 பேர் இரண்டாம் தாளிலும், 27 பேர் முதல் தாளிலும் வெற்றி பெற்றுள்ளனர். வணங்கத்தக்க மகத்தான ஆசிரியர் பணிக்கான சுற்று வட்ட பாதையில் இணைந்துள்ள விடியல் மங்கள்யான்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.                       .



 மேகம்                  
தொட்டதில் 
மகிழ்ச்சி.. 
வானம் 
வசப்பட 
வாழ்த்துகள்.

Tuesday, October 29, 2013

2013 TET RESULTS PUBLISHED


ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு 


ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு:  ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in)  அறிந்து கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாவது ஆண்டாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று தாள் ஒன்றும், அதற்கடுத்த நாள் (ஆகஸ்ட் 18) தாள் இரண்டுக்கான தேர்வும் நடத்தப்பட்டது.
இரண்டு மாதங்களில் முடிவுகள்:
தேர்வு முடிவுகளை இரண்டு மாதங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தாள் ஒன்றினை 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரும், தாள் இரண்டினை 4 லட்சத்து 311 பேரும் எழுதினர். இதில் தாள் ஒன்று தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான 60 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமான மதிப்பெண்களை 12 ஆயிரத்து 596 பேர் பெற்றுள்ளனர். அதன்படி தேர்ச்சி சதவீதம் 4.80 சதவீதமாகும். அதில், ஆண்களின் தேர்ச்சி 4.56 சதவீதமாகவும், பெண்களின் தேர்ச்சி 4.88 சதவீதமாகவும் உள்ளது.
மொழிப்பாடங்களில் எத்தனை பேர்:
மொழிப் பாடங்களைப் பொறுத்தவரையில், தாள் ஒன்றில் தமிழ் மொழியில் 12 ஆயிரத்து 433 பேரும், தெலுங்கில் 106 பேரும், மலையாளத்தில் 20 பேரும், உருதுவில் 23 பேரும், கன்னடத்தில் 14 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தாள் இரண்டில் ஆண்களின் ஆதிக்கம்:
பட்டதாரிகள் அதிகளவில் பங்கேற்ற தாள் இரண்டினைப் பொறுத்தவரையில், 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 14 ஆயிரத்து 496 பேர். தேர்ச்சி சதவீதம் 3.62. தாள் ஒன்றில் பெண்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தாள் இரண்டினைப் பொறுத்தவரையில் ஆண்களே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்களின் தேர்ச்சி சதவீதம் 4.16 ஆக உள்ளது. பெண்கள் 3.39 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தாள் இரண்டில் தமிழ் மொழியில் 14 ஆயிரத்து 363 பேரும், தெலுங்கில் 107 பேரும், மலையாளத்தில் 10 பேரும், உருதுவில் 6 பேரும், கன்னடத்தில் 10 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Followers