Saturday, March 15, 2014

TNPSC GROUP IV C.V க்காக காத்திருக்கும் நண்பர்களுக்கு !

   நண்பர் மணியின் ஒட்டுமொத்த ரேங்க் 4784. இனவாரியான ரேங்க் (பி.வ) 2598. இவருக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு கடிதம் வந்துள்ளது என பதிவு செய்துள்ளார். அவருக்கு நமது வாழ்த்துகள் . இதன் மூலம் சுமார் 5000 ஒட்டுமொத்த ரேங்க் வரை உள்ளவர்களுக்கும் அழைப்பு கடிதம் விரைவில் வரும் என நம்பலாம். 

       அழைப்புக் கடிதங்கள் அஞ்சல் வழியாக மட்டுமே அனுப்பப்படுவதாக தெரிகிறது. ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனவே 4784க்கும் குறைவாக ரேங்க் உள்ளவர்கள் கவலைப்படவேண்டாம். கண்டிப்பாக அழைப்புக்கடிதம் வரும். நீங்கள் அஞ்சல் அலுவலரோடு தொடர்பில் இருங்கள். மேலும் 3469 பணியிடங்களுக்கு 5000 ரேங்க் வரை அழைப்பு வருவது என்பது எப்படி என்றால் ஏற்கனவே குரூப் 2 NON -OT பணியிடங்களில் தேர்வாகி உள்ளவர்கள் குரூப் 4 பணியிடங்களுக்கு வரமாட்டார்கள் என்பதை எதிர்பார்த்து கூடுதலாக அழைப்பு கடிதம் அனுப்பப் பட்டிருக்கலாம் . அதுமட்டுமல்லாமல் PSTM (PERSONS STUDIED IN TAMIL MEDIUM) பிரிவில் வருபவர்களுக்கும் 3500க்கும மேல் ரேங்க் இருந்தாலும் வர வாய்ப்புள்ளது. 

No comments:

Post a Comment

Followers